முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் – செல்லூர் ராஜூ பாராட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஓமைக்ரான் மற்றும் கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம்.

கொரோனா பரவலை முன்பு அதிமுக அரசு எப்படி கட்டுப்படுத்தியதோ, அதுபோன்ற சூழலை இந்த திமுக அரசு உருவாக்க வேண்டும். முதலமைச்சர் முக ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டியிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் போறாது என்றும் அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அதிமுகவின் வேண்டுகோள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்தவிட்டு தற்போது வரவேற்பது அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என கூறினார். மேலும், பிரதமர் மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago