கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு!

Published by
Rebekal

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை நேரில் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின்  தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இருப்பினும் சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் தான் காணப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதாவது வியாழக்கிழமை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு குறித்த நடவடிக்கைகல் பற்றி முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

4 minutes ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

43 minutes ago

“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…

54 minutes ago

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

2 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

3 hours ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

4 hours ago