ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நாளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் கைரேகை கருவி வைக்கப்பட்டுள்ளது.தற்போது வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இனி கைரேகை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும்.ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.
இனி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில்ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…