கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்திடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் களின் காலியிடங்கள் இருப்பதையும், புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்க மாநில அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் குறிக்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும், கர்நாடக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தமிழ்ப்பள்ளிகளை தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…