கொரோனா நோய்ப்பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே அவசர, அவசிய நடவடிக்கையாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 1 வருடமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது. பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுவதே அவசர, அவசிய நடவடிக்கையாகும்.
12-ஆம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட்டு விட்ட நிலையில் பள்ளிகளை நடத்துவது தேவையற்றதாகும். மாணவர்கள் நலன் கருதி அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…