முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, நாளையுடன் முடிவடைய இருந்தது .ஆனால் நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது. மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.இதற்கு இடையில் மே 3 க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு தனது 2ம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், இன்று ( மே மாதம் 2ஆம் தேதி ) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வு அளிக்கப்படுமா என்று ஆலோசிக்கபட உள்ளது.ஏற்கனவே பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025