7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்துள்ளதாகவும், இதில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து சென்னை, கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர், அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியின் நலன் கருதியே இந்தாண்டே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாகவே 300 மருத்துவ இடங்களே உருவாக்கப்பட்டதாக பேசிய அமைச்சர், கடந்த 9 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், புதிதாக சுமார் 3,050 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், சுகாதாரத்துறை மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…