எஸ்.பி.பிக்கான கூட்டுப் பிரார்த்தனை – ரஜினி அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

எஸ்பிபி அவர்கள் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதற்காக இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப கமல்ஹாசன், பாரதிராஜா, சிவகுமார், ஏஆர். ரஹ்மான், இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும், எஸ்பிபி அவர்கள் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதற்காக திரையுலக பிரபலங்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்யவுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாடும் நிலா… எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம். இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago