அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுவை அமர்ந்து கொண்டு வாங்க முயன்ற கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை கடிந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன்.
கோவை ஆட்சியர் சமீரனிடம், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட பணிகளை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கூட்டாக மனு அளித்தனர்.
அப்போது ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மனுவை பெற முயன்றார். அப்போது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தனது 25 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்கும் போது, இப்படி அமர்ந்தவாறு வாங்குவீர்களா? இது என்ன புது பழக்கமாக உள்ளது? என கூறியுள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சமீரான் எழுந்துநின்று மனுவை வாங்கினார். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை மிரட்டியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல்நிலையத்தில் திமுக பிரமுகர் தளபதி புகார் அளித்துள்ளார். மேலும், கொரோனா விதிகளை மீறி அதிகமானோர் ஆட்சியர் அலுவலகத்தில் கூடியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…