சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் தன்னை செல்வாக்கு மிகுந்தவர் போன்று காட்டிக் கொண்டு வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற மாணவர்கள் கார்த்திக்கிற்கு அதிக அளவில் மரியாதை கொடுத்து வந்தனர்.
அதே கல்லூரியில், அவருடன் பயின்று வரும் மாணவர், அஸ்வின். இவர் கார்த்திக்கை உதாசீனப்படுத்திய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வாய்த்தகராறு பெரியதாகி, கல்லூரி முடிந்ததும் கல்லூரி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்த கார்த்திக், அஸ்வினை சரமாரியாக வெட்டினார்.
இதில் அஸ்வினின் இரண்டு கை விரல்களை கார்த்திக் வெட்டினார். தற்பொழுது அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…