கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
அதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இன்று பேரவையில் முன்னாள் அமைச்சா் துரைக்கண்ணு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவா் சாந்தா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டது.
மேலும், நாளை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப் பெற்று அதன்மீது விவாதம் நடைபெறும். 5-ஆம் தேதி அன்று விவாதம் தொடர்ந்து பதிலுரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூடிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், 3-வது நாளாக நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…