விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி என்ற ஊராட்சி.ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.எனவே நேற்று கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தை அந்த ஊரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளரான ராமசுப்பு நடத்தினார் .ஆனால் அந்த கூட்டத்தில் ராமசுப்பு தனது ஆதாரவாளர்களை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள வங்கி மேலாளர் சதீஸ்குமார் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த மாதிரியான கூட்டத்திற்கு அனைவரையும் அழைத்து நடத்த வேண்டும் என்று கூறினார்.
இவர் இவ்வாறு கூறியதால் அங்கு மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதில் சுயநினைவை இழந்த அவரை அருகில் இருந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.இந்த விவகாரம் குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு , அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…