காங்கிரஸ் வெற்றி…இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!!

Published by
பால முருகன்

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, புதிய முதல்வராக சித்தராமையாவை அறிவித்துள்ளது. இதன் மூலம் 2வது முறையாக மீண்டும் முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா இன்று பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டு சென்றார். விழாவில் கலந்துகொண்டு முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட சித்தராமையாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது ” கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சித்தராமையா அவர்களுக்கும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago