தொடரும் ஊரடங்கு! வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்!

Published by
லீனா

வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,  தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு நாட்களில் திருமண ஏற்பாடு செய்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் சுதாவிற்கும், மதுரையை சேர்ந்த கருணாநிதி மகன் சரத்பாபுவிற்கும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி மதுரையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, இவர்களது திருமணம் தள்ளிப்போன நிலையில், மேலும் கால நீட்டிப்பு ஏற்படலாம் என்று தெரிந்து மதுரையில் நடைபெற இருந்த திருமணம் மணமகள் ஊரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று பெரியகுளத்தில், மணமக்கள் மற்றும் 20 உறவினர்கள் முன்னிலையில், திருமண மண்டபத்தில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் மணமக்கள் முக கவசம் அணிந்தவாறு கலந்து கொண்டனர். 

இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம், மணமகளின் தாய்மாமன் மற்றும் உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago