எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி… 2 மணிநேரமாக நீடிக்கும் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர் இழுபறி நீடிக்கும் நிலையில், அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 மணி நேரமாக நடந்து வரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 2 மணி நேரமாகியும் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் தொடர் இழுபறியில் இருந்து வருகிறது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடைய வாக்குவாதம் நிலவி வருவதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய முடியாமல் அதிமுக எம்எல்ஏக்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதனை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக எம்எஸ்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வரும் அக்கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் ஏற்படலாம் என்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 4 மணிநேரமாக நீடித்தும், எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவு எட்டாத நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

40 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago