திருமணம், இறுதிச் சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்.!

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் மற்றும் இறுதி சடங்கிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருமணம் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 50 பேருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025