தமிழகத்திற்கு ஜூலை? தலைநகருக்கு அக்., உக்கிரமாகும்!!அதிர்ச்சி ரிப்போர்ட்

Published by
kavitha

தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அடுத்த மாதம் உக்கிரமாக இருக்கும் என்று வெளியாகியுள்ள ஆய்வறிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில்  கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 465 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அத பாதிப்பு எண்ணிக்கை 4,40,215லிருந்து 4,56,183 ஆக அதிகரித்து உள்ளது.மேலும் குணமடைந்தோர்  எண்ணிக்கை 2,48,190லிருந்து 2,58,685 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011லிருந்து 14,476 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் பாதித்த 1,83,022 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல மகாராஷ்டிராவில் 1,39,010 பேருக்கு  புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனா பாதிப்பில் இருந்து 69,631 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6,531 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,நாடு முழுவதும் சுமார்  4.5 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதோடு மட்டுமின்றி தலைநகரில் தலைவிரித்து ஆடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக உயரும் என்றும் அதில் 60% சதவீத பாதிக்கப்பட்டவர்களாக சென்னையை சேர்ந்தவர்களாக இருப்பர்கள் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி சென்னையில் கொரோனா அக்டோபர் மாதம்  மிக உச்சத்தை அடையும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை தெரிவித்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  தீவிர ஊரடங்கு கொரோனா உச்ச நிலை அடையும் வேகத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Published by
kavitha

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

50 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago