தமிழகத்தில் 20,000-ஐ நெருங்கும் கொரோனா தொற்று...!

In Tamil Nadu alone, 19,558 people have been diagnosed with corona infection today.

தமிழகத்தில் இன்று மட்டும் 19,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் 19,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 147 பேர்  உயிரிழந்துள்ளனர். 17,164 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 5,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.