#Breaking: ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக ஆளுநர் மாளிகையில் இதுவரை 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணிநேரத்தில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பரவும் கொரோனா, ஆளுநர் அலுவலகத்தையும் விடவில்லை.
தமிழக ஆளுநர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதித்த வீரர்கள் அனைவரும் ராஜ் பவனின் பிரதான வாயிலில் பணிபுரிபவர்கள் எனவும், ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட யாரும் இவர்களுடன் தொடர்புடையவர்கள் இல்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025