தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சில தினங்களில் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் வீடு திரும்பிய நிலையில், குழந்தையின் தாத்தாவிற்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.
இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கடந்த 2-ம் தேதி வீட்டில் உள்ளவர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிறந்து 27 நாள்களான குழந்தைக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…