வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார்.
அதாவது, 72 மணி நேரத்திற்கு முன் முகவர்கள், அதிகாரிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது என்றும் 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
14 மேஜைகள் வைத்து இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஒவ்வொரு மேஜைக்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை அதிகாரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…