பிரசவத்திற்கு பிறகு பெண்மணிக்கு அறியப்பட்ட கொரோனா – குழந்தைக்கு தொற்று உள்ளதா?

கர்ப்பிணிகளையும் விட்டு வைக்காத கொடுமையான கொரோனா, பிரசவத்திற்கு பின்பு சென்னை திருவல்லிக்கோணி பெண்ணுக்கு அறியப்பட்டதால் அதிர்ச்சி.
சென்னை திருவல்லிக்கோனியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவரின் 25 இளம் வயது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் தேதி அழகிய குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு எடுக்கப்பட்ட சோதனையில் ஒன்றாக பெண்ணுக்கு கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் kmc மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த உறவினர்களையும் தனிமையே படுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என சோதனை மேட்கொள்ளப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025