தமிழகத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடும் உன்னத பணியினை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர். திருவாசகமணி தற்போது திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டீன் திருவாசகமணியை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேற்று இரவு அதிரடியாக மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு பதில் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் டீனாக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என புகார் கூறிய டீனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வைலைதளங்களில் வைரலானதை அடுத்து தூத்துக்குடி கல்லூரி டீன் திருவாசகமணி அதிரடி மாற்றம் செய்யப்பட்டார். இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்க்ள் மாற்றப்படுவது இது நான்காவது முறை ஆகும். ஏற்கனவே சென்னை ஸ்டான்லி, கோவை, திருச்சி மருத்துவக் கல்லூரி டீன்கள் மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…