CPIM Protest : பாஜக அரசு இந்தியாவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது.! மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பராபரப்பு பேட்டி.!

Published by
மணிகண்டன்

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையிலெடுத்து ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. மதுரையில் நடைபெறும் போராட்டத்தினை மதுரை எம்பி சு.வெங்கடேசன் வழிநடத்தினார்.

இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளாக பாஜக அரசு இந்தியாவை அழிவு பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக மாநிலம் முழுக்க ரயில் மறியல் போராட்டங்களை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தி வருகிறோம். பாஜக 2 ஜாதிகளுக்கு இடையே சண்டை மூட்டி குளிர் காய்ந்த இயக்கம்.

மணிப்பூரில் இரண்டு இனங்களுக்கு இடையே சண்டை மூட்டிய அரசு, இன்றைக்கு இந்தியாவுக்கும் பாரதத்துக்கும் இடையே சண்டை மூட்ட நினைக்கிறது. வெறுப்பை உருவாக்குவதே பாசிச சித்தாந்தம். கடந்த 9 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அத்திவாசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது.

400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் தற்போது 1,200 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு, 200 ரூபாய் குறைத்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். இதுவரை 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் இன்னும் இங்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது.

பெரும்பாலானோருக்கு வேலை தரும் சிறு குறு நிறுவனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. பல நிறுவனங்கள்  மூடிவிட்டன. கொரோனா காலத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியையாவது தள்ளுபடி செய்யுங்கள் என சிறு குறு நிறுவனங்கள் கெஞ்சுகின்றன.  ஆனால், கோடி கோடியாய் அதானி கடனை தள்ளுபடி செய்து கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் அதானி பற்றி பேச வேண்டும். அனால் இங்கு இந்தியா எனும் பெயர் பற்றி பேச வைத்துள்ளனர். ஆளும் பாஜகவின் இம்மாதிரி மக்களை திசை திருப்பும் செயல்களுக்கு எதிராக இந்தியராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் தற்போது மதுரை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

3 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

4 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

5 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

5 hours ago

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

6 hours ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

7 hours ago