tamilnadu polling percentage at 5 [file image]
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு.
ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆர்வத்துடன் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 51.41% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தருமபுரியில் 67.52%, நாமக்கல்லில் 67.37%, ஆரணியில் 67.34%, கள்ளக்குறிச்சியில் 67.23%, கரூரில் 66.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதுபோன்று, குறைந்தபட்சமாக தென் சென்னை 57.04%, மத்திய சென்னை 57.25%, வட சென்னையில் 59.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணிவரை 56.68% பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்று, அதுதொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…