புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது போல் ஆகும். அதாவது, பழனி பஞ்சாமிர்தம், சேலத்து மாம்பழம் போல அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படும். இதன்மூலம் வேறு பகுதிகளில் இந்த பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலை பூண்டு, ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கத்தினர் அரசிடம், திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதேபோல் காரைக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் 2013 ஆம் ஆண்டு கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அவையாவன, சேலத்து மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, ராஜபாளையம் நாய், கோடாலிகருப்பூர் சேலை இவைகளுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த பொருட்களை வெளியூர்களில் போலியாக தயாரித்து விற்பனை செய்வது குற்றமாகும்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…