500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், சைதாப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட தாடண்டர் நகர் பகுதியில் சுமார் 5,000 அரசு ஊழியர்கள் இருப்பதாகவும், இதில் சுமார் 500 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் புகார் கூறப்படுகிறது.

எனவே ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த 500 அரசு ஊழியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். தலைமை செயலகம், எழிலகம், குறளகம் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். இதுபோன்று தமிழகத்தில் சில பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago