தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸை விரைந்து மேற்கொள்ள இந்தியா, சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஆர்டர் செய்து, அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வந்திருந்தது. இதையடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி, தமிழகத்திற்கு 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று வந்தடைந்தன.
இதனிடையே தமிழக அரசு சீனாவில் நேரடியாக ஆர்டர் செய்திருந்த 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் நேற்று வந்தன. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை கொண்டு சேலத்தில் முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உடனடியாக முடிவு வந்துள்ளது என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…