தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு அளித்தார் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப். 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுக எம்பி முகமது ஜான் 2021 மார்ச் 23-ஆம் காலமானதை அடுத்து அந்த இடம் காலியாக இருந்தது. தற்போது அந்த இடத்துக்கும் நடக்கும் தேர்தலில் திமுக வேட்பாளராக அப்துல்லா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…