வேட்புமனுவை மறந்த திமுக வேட்பாளர்.. ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த அமைச்சர்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் எம்.எல்.ஏ.ராமகிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் வந்தனர். அந்த சமயம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது.

அதாவது தான் பூர்த்தி செய்த வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார். இதன்பின் தங்க தமிழ்செல்வன் சிறிது நேரம் அலுவலகம் வாயிலில் காத்திருந்தார். வேட்புமனுவை மறந்ததால் அவருடன் வந்த அமைச்சர்களும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

பின்னர், தனது உதவியாருக்கு தொலைப்பேசியில் அழைத்து, வேறொரு காரில் மறந்து வைத்த வேட்புமனு படிவத்தை எடுத்து வர சொல்லி இருக்கிறார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது. இதனையடுத்து, வேட்புமனு படிவம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

Recent Posts

தமிழ்நாட்டில் 1967, 1977 போன்று 2026 தேர்தல்..த.வெ.க தலைவர் விஜய் ஸ்பீச்!

சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…

39 minutes ago

வெற்றி பேரணியில் தமிழ்நாடு… தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

1 hour ago

அதிமுகவின் போராட்டத்தால் அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…

2 hours ago

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

3 hours ago

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

4 hours ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

5 hours ago