பழனிசாமி பல்லாண்டு வாழ வேண்டும்;திமுக ஆட்சியின் செயலை அவர் பார்க்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்

Published by
Dinasuvadu desk

தமிழக தேத்தல் களம் அடுத்த கட்டத்தை நோக்கி  பரபரப்பாக நகர தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுக பிரச்சாரத்தில் அணல் காற்று  வீசத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர்            மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்;

முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் எது எதையோ வாய்க்கு வந்தபடி புலம்புகிறார்.திமுகவை வீழ்த்துவதற்கு என்னையே பலியிட தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.அதை நான் பாராட்டுகிறேன் என்றார்.

பழனிசாமி அவர்களே திமுகவை அழிக்க போகிறேன் என்று கூறியுள்ளீர்கள். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழித்து போனார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது.திமுகவை வீழ்த்தவும் முடியாது அதை நினைத்து பார்க்கவும் முடியாது.திமுகவை வீழ்த்த ஒருவன் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் முடியாது.

அண்ணா காலத்திலிருந்து பார்க்கிறோம் திமுகவை வீழ்த்த பலர் கிளம்பினர்.திமுக வுக்கு எதிர்ப்பு வளரவளரதான் திமுக வளரும். இதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்.

மத்தியிலும் மாநிலத்திலும் நாம் ஆட்சியில் இல்லை ஆனால் நம்மை வீழ்த்த இத்தனை பேர் கிளம்பியுள்ளனர் என்றால் நம் சக்தி என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் இல்லாததால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கின்றனர். கலைஞர் இல்லாவிட்டாலும் கலைஞரால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் இந்த இயக்கத்தில் உள்ளனர் மறந்துவிடாதீர்கள். கலைஞர் இன்னும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு, பயத்தில் ‘உயிரை விடுவேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் திரு.பழனிசாமி. அவர் பல்லாண்டு வாழ வேண்டும்; ஆட்சி கிடைத்தால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை, திமுக ஆட்சி செயலில் காட்டுவதை அவர் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago