திமுக கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு ..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published by
Venu
  • கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு  தொடரப்பட்டது.
  • கடத்தப்பட்ட முதுகுளத்தூர் 8வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  இரு கட்டங்களாக நடைபெற்றது.பின்னர் வாக்கு எண்னிக்கையானது நடைபெற்றது .ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக இடங்களை கைப்பற்றியது.இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர்  ராஜா .இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், என் தந்தை சாத்தையா .இவர்  சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய எட்டாவது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி காலை 5 மணி அளவில் தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. என்னுடைய தந்தையின் செல்போனுக்கு போன் செய்தபோது அதிமுகவை சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்டோர்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக கூறினர்.

இதையடுத்து தந்தை மீட்டுத்தருமாறு காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் கடந்த ஆறாம் தேதி என் தந்தையை பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை பார்க்க முயன்றபோது அவர்கள் தடுத்து விட்டனர். எனவே எனது தந்தையை மீட்டுத் தருமாறு அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ராஜா , புகழேந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் “சாத்தையா சட்டவிரோதமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு  உத்தரவிட்டனர்.காவல்துறை தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் இது தொடர்பான அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை  நாளை ஒத்திவைத்தார்.

Recent Posts

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

41 minutes ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

56 minutes ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

1 hour ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

1 hour ago

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

2 hours ago

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…

3 hours ago