அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 125 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ளார்.
இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். இந்த தொகுதி வாக்கு எண்ணிக்கையில், திமுக பொதுச்செயலாளர், வேட்பாளருமான துரைமுருகன் ஆரம்ப முதலே பின்னடைவில் இருந்து வந்தார். பின்னர் அதிமுக, திமுக என மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில், துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
அதாவது, 17-வது சுற்று முடிவில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு 55,267 வாக்குகளும் பெற்றுருந்தனர். மீண்டும் சரிவை கண்ட துரைமுருகன், இந்த முறை வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், முடிவுக்கு வந்தது இழுபறி… 754 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமுவைப் பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…