திமுக அரசு இதனை செய்யாவிட்டால் கோட்டையை நோக்கி வருவோம்.! அண்ணாமலை ஆவேசம்.!

Published by
மணிகண்டன்

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கள்ளக்குறிச்சி வந்திருந்து விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில்,, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இங்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. அவர் இங்கும் வாரிசு அரசியல் செய்து உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைக்கிறார்.

இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பது, சஸ்பெண்ட் , இடமாற்றம் செய்வது, நெஞ்சு பதறுகிறது என அறிக்கை வெளியிடுவது ஆகியவை எங்களுக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக, இந்த உயிரிழப்புக்கு தொடர்பான துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். 1000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் புதிய மதுபான கொள்கையை கொண்டு வரவேண்டும்.

இதனை செய்யாவிட்டால், நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் முடிந்து பின்னர் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பாஜக தொண்டர்கள் கோட்டையை (சென்னை ஜார்ஜ் கோட்டை) நோக்கி வருவார்கள். தற்போது சிபிசிஐடி விசாரணை தேவையில்லை. சிபிசிஐடி என்பது ஒரு தவறு நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டிய அமைப்பு. அவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள். உடனடியாக இந்த வழக்கை சிபிசிடிக்கு மாற்றுங்கள் கண்டிப்பாக இந்த சம்பவத்துக்கு ஆளும் கட்சி தொடர்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

55 seconds ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

1 hour ago

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…

1 hour ago

பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…

2 hours ago

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

12 hours ago