முதலமைச்சரின் அறிவிப்புகள் அரைவேக்காட்டுதனமானது.! மு.க.ஸ்டாலின் காரசார ட்வீட்.!
எஞ்சினியரிங் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தினாலே (அரியர்ஸ் உட்பட) பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதில், ‘அரியர்ஸ் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்ததில் இருந்தே குழப்பங்கள் நீடிக்கின்றன.
சாத்திய கூறுகளை ஆராய்ந்து தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என கூறியிருந்தோம். அதனை அரசு பொருட்படுத்தவில்லை.
முதமைச்சரின் முடிவு அவசரமானது, அரைவேக்காட்டுதானமானது என்பதை தற்போதைய அறிவிப்புகள் நிரூபித்து வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு AICTE எதிர்ப்புகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அறியர்ஸ் தேர்வுகளை நடத்த தயார் என தமிழக அரசு தெரிவித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்கல்விதுறை அமைச்சர்களும், மற்றவர்களும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவது அரசின் தெளிவின்மையை காட்டுகிறது.
கயிறு இழுக்கும் போட்டியில் வதைபடுகிறது மாணவர்களின் எதிர்காலம். சுய விளம்பரத்திற்காக அரைவேக்காட்டுதனமாக செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை பாலாக்காதீர்கள். ‘ என பதிவிட்டுருந்தார்.
‘அரியர்ஸ்’ தேர்ச்சி அறிவிப்பில் எத்தனை குழப்பங்கள்!?
சாத்தியங்களை ஆய்ந்து கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கக் கோரியிருந்தேன்!
ஆனால்@CMOTamilNadu அறிவிப்பே ஆலோசனைகளற்ற,அரைவேக்காட்டுத்தனம் என தெரிகிறது!@AICTE_INDIA மறுக்கிறது.அரசு பூசி மெழுகுகிறது!#SaveTNStudents pic.twitter.com/cgu8y2jfGz
— M.K.Stalin (@mkstalin) September 9, 2020