தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது.அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 14-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் கர்நாடக அரசு அணைக்கட்டவும் அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் வழக்கு தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.அதில் “தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காமல் அதிமுக தோல்வியை கண்டதாகவும் ,அதை கண்டித்து தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை , கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 21-ம் தேதி திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…