திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது.
இதுகுறித்து,நேற்று காலை ஊடகங்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின்,”மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்வர் பதவி ஏற்பு விழாவானது ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறும்” எனக் கூறினார்.
ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்,இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைமைச் செயலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்வர்.மேலும்,இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவையும் பெற்று சட்டமன்றத் தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
அதன்பின்னர் ஸ்டாலின்,ஆதரவு பெற்ற உறுப்பினர்களின் கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையைப் பெறுவார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…