சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை பேரூரில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16 லிருந்து 15 ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளார். பேரு காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் பொறுத்த வரையில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை இப்போதே அடைந்துவிட்டோம். அந்த அளவுக்கு சுகாதாரத்துறை வெற்றிகரமாக, சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் கொண்டார்.
இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவமனையில் பிரசவம் பெறுவதும் தமிழ்நாட்டில் தான் என்றும் அதுபோல் ஏழை, எளியோருக்கு இலவச சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் 2000 அம்மா மினி க்ளினிக் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட அரசு அதிமுக அரசு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வின் மூலமாக அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவிலே தேர்ச்சி பெற முடியாத சூழலில், அதிமுக அரசு 7.5 % உள் ஒதுக்கீடை கொண்டுவந்து 435 பேர் மருத்துவ படிப்பை படிக்கச் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.
தொடந்து பேசிய முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக, நமக்கு சாதி, மதம் பேதமில்லை. காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை கொடுப்பது திமுக என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…