புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு செய்யும் துரோகம் எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்டுள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழி கொள்கை, 3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என பலவேறு அம்சங்கள் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கை 2020 பற்றிய கருத்து மேடை நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, அதனை நிராகரிக்க வேண்டும் எனவும், புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.’ எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை கூறியுள்ளார்.
மேலும், ‘ புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்கு எதிரான கருத்துகளை வெளிபடுத்திவருகிறார். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். ‘ எனவும் தனது கருத்தை முக.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…