திருச்சி சிறுகனூரில் இன்று திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்திற்கான 10 ஆண்டுகள் தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார்.
திமுகவின் 14 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநில மாநாடு பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமாக சுமார் 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதில் 400 ஏக்கர் வாகனம் நிறுத்தவும், 350 ஏக்கர் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2.5 லட்சம் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மூன்று பிரம்மாண்ட மேடைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவும் நடந்து சென்று தொண்டர்களிடம் பேசவும் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.மற்ற இரு மேடைகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் காங்கிரஸ் க்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சற்றுமுன் முடிந்த நிலையில் 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் மு.க.ஸ்டாலின் 1 மணிக்கு மாநாடு நுழைவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதன் பின்பு மாலையில் 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் ஸ்டாலின் ‘விடியலுக்கான முழக்கம்’ உறுதிமொழிகள் குறித்தும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் அறிவிக்கிறார்
இதில் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலைமை குறித்து திமுகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி சாராத, பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேசவுள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…