பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கடன் வாங்க கூடிய செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அண்மைய நவீன காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களுமே வீட்டிலிருந்தபடியே சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது, கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பணம் கட்டுவது என அனைத்தையும் மொபைல் மூலமாகவே இணையதளத்தில் செய்துவிடுகிறார்கள். இதனால் பலரது நேரமும் வேலையும் மிச்சம் ஆனாலும் பலரது வாழ்க்கையும் இதனால் சீரழிந்து விடுகிறது. சில செயலிகள் மூலமாக மர்ம நபர்கள், பொது மக்களின் பணங்களை வாரிக் கொண்டும் சென்று விடுகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் மூலமாக லோன் கொடுக்க கூடிய செயலிகள் தற்பொழுது பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சில பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், ஆன்லைன் கடன் செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் கடன் செயலி மூலமாக நிறைய வன்முறைகள் நடப்பதாக புகார் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…