‘RSS உறுப்பினர்’ போல பேசக் கூடாது – ஆளுநர் மீது வைகோ காட்டம்!

Published by
Edison

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மேலும்,பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில்,பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து ஆளுநர் ஆர்என்ரவி பேசி இருப்பது பாஜக,ஆர்எஸ்எஸ். தலைவர்கள் பேசுவது போல இருக்கின்றது.எனவே,ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல ஆளுநர் பேசக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,தனது அறிக்கையில்,”ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர்,எந்தத் அரசியல் கட்சியின் தத்துவ சாயல் தம் மீது விழுவதற்கு இடம் தரக் கூடாது என்றும் ஆனால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள்,அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல்,அத்துமீறி செயல்பட்டு வருகின்றார்.குறிப்பாக,மத்திய பாஜக அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் குரலை எதிரொலிக்கின்றார்”, என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,ஆளுநர் ஆர்என் ரவி,ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்,பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தான இயக்கம்,தீவிரவாத இயக்கம் என்று சாயம் பூச முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும்,மாறாக,உண்மையில்,பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நாட்டை சீர்குலைக்க முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?,அதற்காகத்தானே மத்திய பாஜக அரசு தேசிய விசாரணை முகமை (NIA) எனும் அமைப்புக்கு அபரிதமான அதிகாரங்களை அளித்து இருக்கின்றது என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே,ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும்,தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக் கூடாது என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent Posts

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

52 seconds ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

29 minutes ago

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…

42 minutes ago

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

14 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

14 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

15 hours ago