சமீபத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், இந்தியாவில் 1993 முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணிகளின் போது விஷவாயு தாக்கி, மற்ற விபத்துகளின் மூலமாகவும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். ‘
அதில் வருத்தப்படகூடிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக 3 வருடத்தில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்திரபிரதேசத்தில் 71 பேரும், ஹரியானாவில் 51 பேரும், உயிரிழந்துள்ளனர். இதில், 15 மாநிலங்களில் உயிரிழந்தவர்கள் மட்டுமே கணக்கெடுக்கபட்டுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், ‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமானோர் கழிவுகளை சுத்தம் செய்கையில் உயிரிழந்திருப்பது வெட்ககேடானது. இதனை சரி செய்ய தமிழக அரசிடம் பணமில்லையா அல்லது மனமில்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘ அவ்வாறு உயிரிழந்தவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என விசாரித்து பாருங்கள்.’ என கூறியிருந்தார்.
இது குறித்து பேசிய அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ கழிவுகளை அகற்ற புதிய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…