திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் காலமானதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாக இருந்தது . கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும்.இதற்கு இடையில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புகிறார் .இதனால் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகுகிறார் துரைமுருகன் .ஆகவே மார்ச் 29-ஆம் தேதியன்று பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகிய நிலையில்,பொதுச்செயலாளர் பதவியுடன் சேர்ந்து இந்த பதவிக்கும் புதிய நபர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…