இறுதி நாள் பிரச்சாரம்… மேடையில் கண் கலங்கிய அண்ணாமலை.!

Published by
அகில் R

Annamalai : கோவையில் முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பின் ஈடுபட்ட போது பெற்றோர் பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து பேசிய அண்ணாமலை கண்கலங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று கோவையில் உள்ள கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்த மேடையில் அவர் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்த உடன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலை வந்துவிட்டது. கடந்த ஓராண்டு காலமாக இங்கு வந்து உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், எனக்கு துளியும் நேரம் கிடைக்கவில்லை. இதனால் நேற்றைய தினம் உறுதியாக நான் உங்களை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று இங்கு வந்து உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன். தற்போது உங்களை காண எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் நான் மிகவும் பாக்கியம் செய்துள்ளேன்”, என்று உருக்கமாக பேசி கொண்டிருக்கும் போது அண்ணாமலை கண் கலங்கினார். அதன்பின் அங்கு இருந்த தொண்டர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோஷமிட்டு அவரை தேற்றினார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

33 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

4 hours ago