தமிழத்தில் உள்ள குடும்ப அட்டைதார்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் கொரோனா வைரஸ் நிவாரணஅறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் .அவரது அறிவிப்பில்,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், சர்க்கரை விலை இன்றி வழங்கப்படும்.கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்றும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும் .இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாதவர்களுக்காக, இருக்கும் இடத்திற்கே சென்று சூடான சுவையான உணவு வழங்கப்படும்.நடைபாதை கடைகாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் கட்டிட தொழிலாளர்கள்,ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும்.ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.பிற மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் 15,கிலோ அரிசி. ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.மார்ச் மாத ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் ஏப்ரல் மாதம் வாங்கிக் கொள்ளளலாம்என்றும் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி முதல் 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…