அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது – பொன். இராதாகிருஷ்ணன் ட்வீட்.
நேற்று டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். இதையடுத்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் நேர்மையான, தூய்மையான ஆட்சி வர வேண்டும் என்று 55 ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கும் மக்கள் மத்தியில் அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் அண்ணாமலை பாஜகவில் இணைந்திருப்பத்தை மகிழ்வோடு வரவேற்கிறேன் என பொன். இராதாகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…