விசிகவின் புதிய யுத்தி… டிஜிட்டல் முறையை கையில் எடுத்த திருமாவளவன்!

Published by
பாலா கலியமூர்த்தி

VCK: மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய யுத்தியை கையில் எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பார்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சிலர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, தங்களது கட்சி, வாக்குறுதிகள் மற்றும் கருத்துக்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இளைஞர்களையும், மக்களையும் கவரும் விதமாக டிஜிட்டல் முறையில் ‘கியூஆர் கோடு’ மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சமீபத்தில் தான் இந்த கியூஆர் கோடு பிரச்சாரத்தை விசிக தலைவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேர்தல் பிரச்சார வாசகங்களுடன், கியூஆர் கோடு இடம்பெற்ற போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடு’-ஐ செல்போனில் ஸ்கேன் செய்தால், திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்று  ஒளிபரப்பாகும்.

அதில், மக்களவை தேர்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான கியூஆர் கோடு போஸ்டர் பிரச்சாரத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு முறைகளில் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் விசிக டிஜிட்டல் யுத்தியை கையில் எடுத்துள்ளது.

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago