கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் இதோ…

Published by
மணிகண்டன்

Election2024 : சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தை பொது சின்னமாக கொண்டு தேர்தலை சந்தித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற தேர்தல் வரையில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்ட்டியிட்டு தமிழகம் முழுவதிலும் 6.5 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றது.

Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

அதே போல வரும் மக்களவை தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை அணுகியது நாம் தமிழர் கட்சி. ஆனால் அதற்கு முன்னரே, கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கோரியதால் முன்னுரிமை அடிப்படையில் அந்த கட்சிக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

Read More – பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!

இதனால், புதிய சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்து இருந்தார். இதனை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி, இந்த சின்னத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் பயன்படுத்தி கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

10 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

11 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

12 hours ago