தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 5,002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 5,002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆண்கள் 4,213, பெண்கள் 787 மற்றும் திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 5,002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், குறைந்தபட்சமாக விளவங்கோட்டில் 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வரும் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் அதன்பிறகு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்குள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…